அம்ம வாழி தோழி மகிழ்நன் கடன் அன்று |
31 |
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர் |
|
முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை |
|
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே? |
|
முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது. |