அம்ம வாழி தோழி யான் இன்று

118
அம்ம வாழி, தோழி! யான் இன்று,
அறனிலாளற் கண்ட பொழுதில்,
சினவுவென் தகைக்குவென் சென்றனென்
பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே.

சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயில் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி, நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉம் ஆம். 8

உரை

Home
HOME