அம்ம வாழி பாண எவ்வைக்கு |
89 |
அம்ம வாழி, பாண! எவ்வைக்கு |
|
எவன்? பெரிது அளிக்கும் என்ப பழனத்து |
|
வண்டு தாது ஊதும் ஊரன் |
|
பெண்டு என விரும்பின்று, அவள்தன் பண்பே. |
|
'தலைமகன் தலைமகளைப் போற்றி ஒழுகாநின்றான்' என்பது கேட்ட காதல்பரத்தை அவன் பாணனுக்குச் சொல்லுவாளாய் அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. 9 |