அம்ம வாழியோ மகிழ்ந

77
அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்:
பேர் ஊர் அலர் எழ, நீர் அலைக் கலங்கி,
நின்னொடு தண் புனல் ஆடுதும்;
எம்மொடு சென்மோ; செல்லல், நின் மனையே.

முன் ஒரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக்கேட்டு, ' இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, ' புதுப்புனல் ஆடப் போது' என்ற தலைமகற்குச் சொல்லியது. 7

உரை

Home
HOME