அம்ம வாழியோ மகிழ்ந |
77 |
அம்ம வாழியோ, மகிழ்ந! நின் மொழிவல்: |
|
பேர் ஊர் அலர் எழ, நீர் அலைக் கலங்கி, |
|
நின்னொடு தண் புனல் ஆடுதும்; |
|
எம்மொடு சென்மோ; செல்லல், நின் மனையே. |
|
முன் ஒரு ஞான்று தலைவியோடு புனலாடினான் எனக்கேட்டு, ' இவனுடன் இனி ஆடேன்' என உட்கொண்ட பரத்தை, ' புதுப்புனல் ஆடப் போது' என்ற தலைமகற்குச் சொல்லியது. 7 |