அரும் பொருள் வேட்கையம் |
359 |
அரும் பொருள் வேட்கையம் ஆகி, நிற் துறந்து, |
|
பெருங் கல் அதரிடைப் பிரிந்த காலைத் |
|
தவ நனி நெடிய ஆயின; இனியே, |
|
அணியிழை உள்ளி யாம் வருதலின் |
|
5 |
நணிய ஆயின சுரத்திடை ஆறே. |
மீண்டு வந்த தலைமகன் அவளைப் பிரிகின்ற காலத்துச் சுரத்துச் சேய்மையும், வருகின்ற காலத்து அதன் அணிமையும், கூறியது. 9 |