அவல்தொறும் தேரை

453
அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங் குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை; அதனால்,
நீர் தொடங்கினவால் நெடுங் கண்; அவர்
5
தேர் தொடங்கு இன்றால் நம்வயினானே.

பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3

உரை

Home
HOME