அறம் சாலியரோ |
312 |
அறம் சாலியரோ! அறம் சாலியரோ! |
|
வறன் உண்டாயினும், அறம் சாலியரோ! |
|
வாள் வனப்பு உற்ற அருவிக் |
|
கோள் வல் என்னையை மறைத்த குன்றே. |
|
உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி, 'நின் ஐயன்மார் பின் துரந்து வந்த இடத்து நிகழ்ந்தது என்னை?' என்ற தோழிக்கு நிகழ்ந்தது கூறி, தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது. 2 |