அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்கொல்

204
அன்னாய், வாழி, வேண்டு, அன்னை! அஃது எவன்கொல்?
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ,
பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி,
நல்லள் நல்லள் என்ப;
5
தீயேன் தில்ல, மலை கிழவோற்கே!

வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4

உரை

Home
HOME