அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர் |
208 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர் |
|
கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப் |
|
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு, |
|
மணி நிற மால் வரை மறைதொறு, இவள் |
|
5 |
அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே. |
செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8 |