அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத் தேன் மயங்கு |
203 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத் |
|
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு |
|
உவலைக் கூவல் கீழ |
|
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே. |
|
உடன்போய் மீண்ட தலைமகள், 'நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்?' எனக் கேட்ட தோழிக்குக் கூறியது. 3 |