அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைப் புலவுச் சேர் |
210 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைப் |
|
புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப் |
|
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று, |
|
மணி புரை வயங்கு இழை நிலைபெறத் |
|
5 |
தணிதற்கும் உரித்து, அவள் உற்ற நோயே. |
காப்பு மிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தினான் ஆயிற்று' என்று வெறியெடுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 |