அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்றும்

207
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நன்றும்
உணங்கல கொல்லோ, நின் தினையே? உவக்காண்
நிணம் பொதி வழுக்கின் தோன்றும்,
மழை தலைவைத்து, அவர் மணி நெடுங் குன்றே.

'மழையின்மையால் தினை உணங்கும்; விளையமாட்டா; புனங்காப்பச் சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று' என வெறுத்திருந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. 7

உரை

Home
HOME