அன்னை தந்தது ஆகுவது

247
அன்னை தந்தது ஆகுவது அறிவென்:
பொன் நகர் வரைப்பில் கன்னம் தூக்கி,
'முருகு' என மொழியும் ஆயின்,
அரு வரை நாடன் பெயர்கொலோ, அதுவே?

வெறி விலக்கலுறும் தோழி தமர் கேட்பத் தலைமகளை வினவுவாளாய்ச் சொல்லியது. 7

உரை

Home
HOME