அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல் நீர்ப் படர் |
109
|
அன்னை, வாழி! வேண்டு, அன்னை! நெய்தல் |
|
நீர்ப் படர் தூம்பின் பூக் கெழு துறைவன் |
|
எம் தோள் துறந்த காலை, எவன்கொல் |
|
பல் நாள் வரும், அவன் அளித்த பொழுதே? |
|
அறத்தொடு நின்ற பின்பு வரைவான் பிரிந்த தலைமகன் கடிதின் வாராதவழி, ஐயுற்ற செவிலி, 'அவன் நும்மைத் துறந்தான்போலும்; நுங்கட்கு அவன் கூறிய திறம் யாது?' என்றாட்குத் தோழி சொல்லியது. 9
|