ஆள் வழக்கு அற்ற |
329 |
ஆள் வழக்கு அற்ற பாழ்படு நனந் தலை |
|
வெம் முனை அருஞ் சுரம் நீந்தி, நம்மொடு |
|
மறுதருவதுகொல் தானே செறிதொடி |
|
கழிந்து உகு நிலைய ஆக |
|
5 |
ஒழிந்தோள் கொண்ட, என் உரம் கெழு, நெஞ்சே? |
இடைச்சுரத்தின்கண் மீளலுறும் நெஞ்சினை நொந்து, தலைமகன் உழையர்க்குச் சொல்லியது. 9 |