இருஞ் சாய் அன்ன

18
இருஞ் சாய் அன்ன செருந்தியொடு வேழம்
கரும்பின் அலமரும் கழனி ஊரன்,
பொருந்து மலர் அன்ன என் கண் அழ,
பிரிந்தனன் அல்லனோ, 'பிரியலென்' என்றே?

பரத்தையிற் பிரிந்து வந்து தெளித்துக் கூடிய தலைமகற்குப் பின் அவ் ஓழுக்கம் உளதாயவழி, அவன் வரவிடுத்த வாயில்கட்குத் தலைமகள் சொல்லியது. 8

உரை

Home
HOME