ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் |
16 |
ஓங்கு பூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால் |
|
சிறு தொழுமகளிர் அஞ்சனம் பெய்யும் |
|
பூக் கஞல் ஊரனை உள்ளி, |
|
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே. |
|
வாயிலாய்ப் புகுந்தார்க்குத் தோழி, 'அவன் வரவையே நினைத்து இவள் கண்ணும் பசந்தன; இனி அவன் வந்து பெறுவது என்னை?' எனச் சொல்லி, வாயில் மறுத்தது. 6 |