ஓமை

316
பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்த,
தேர் அகல் அல்குல் அவ் வரி வாட,
இறந்தோர்மன்ற தாமே பிறங்கு மலைப்
புல் அரை ஓமை நீடிய
5
புலி வழங்கு அதர கானத்தானே.

தலைமகள் மெலிவுக்கு நொந்து, தலைமகன் பிரிவின்கண் தோழி கூறியது. 6

321
உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப்
புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து,
மொழிபெயர் பல் மலை இறப்பினும்,
5
ஒழிதல் செல்லாது ஒண்டொடி குணனே.

பிரிந்து போகாநின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகள் குணம் நினைந்து இரங்கிச் சொல்லியது. 1

உரை

Home
HOME