அஞ்சியத்தை மகள் நாகையார் |
'முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் |
|
பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன், |
|
பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின், |
|
ஆடு மயில் முன்னது ஆக, கோடியர் |
|
5 |
விழவு கொள் மூதூர் விறலி பின்றை |
முழவன் போல அகப்படத் தழீஇ, |
|
இன் துணைப் பயிரும் குன்ற நாடன் |
|
குடி நன்கு உடையன்; கூடுநர்ப் பிரியலன்; |
|
கெடு நா மொழியலன்; அன்பினன்' என, நீ |
|
10 |
வல்ல கூறி, வாய்வதின் புணர்த்தோய்; |
நல்லை; காண், இனி காதல் அம் தோழீஇ! |
|
கடும் பரிப் புரவி நெடுந் தேர் அஞ்சி, |
|
நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல், |
|
தொல் இசை நிறீஇய உரை சால் பாண்மகன் |
|
15 |
எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும், |
புதுவது புனைந்த திறத்தினும், |
|
வதுவை நாளினும், இனியனால் எமக்கே. |
|
வரைந்து எய்திய பின்றை மண மனக்கண் சென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது; வரைவு மலிந்து சொல்லிய தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம். - அஞ்சியத்தை மகள் நாகையார் | |
உரை |
மேல் |