மாக் கடல் முகந்து
|
|
மாக் கடல் முகந்து, மாதிரத்து இருளி,
|
|
மலர் தலை உலகம் புதைய, வலன் ஏர்பு,
|
|
பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ,
|
|
போழ்ந்த போலப் பல உடன் மின்னி,
|
5
|
தாழ்ந்த போல நனி அணி வந்து,
|
|
சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி,
|
|
இடியும் முழக்கும் இன்றி, பாணர்
|
|
வடி உறு நல் யாழ் நரம்பு இசைத்தன்ன
|
|
இன் குரல் அழி துளி தலைஇ, நல் பல
|
10
|
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை,
|
|
செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில்,
|
|
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி,
|
|
மணி மண்டு பவளம் போல, காயா
|
|
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய,
|
15
|
கார் கவின் கொண்ட காமர் காலை,
|
|
செல்க, தேரே நல் வலம் பெறுந!
|
|
பெருந் தோள், நுணுகிய நுசுப்பின்,
|
|
திருந்துஇழை, அரிவை விருந்து எதிர்கொளவே!
|
பாசறை முற்றிய தலைமகன்
தேர்ப்பாகற்குச் சொல்லியது. -
இடைக்காடனார்
|
|
மேல் |