| முகப்பு | தொடக்கம் | 
| 
இளங் கண்டீரக்கோ | 
| 
 151 | 
| 
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, | |
| 
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், | |
| 
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, | |
| 
புன் தலை மடப் பிடி பரிசிலாக, | |
| 
5 | 
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் | 
| 
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும் | |
| 
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர் | |
| 
நன்னன் மருகன் அன்றியும், நீயும் | |
| 
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப் | |
| 
10 | 
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை | 
| 
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் | |
| 
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.
 |