|  | தொடக்கம் | 
| 
அரிசில் கிழார் | 
| 
 146 | 
| 
அன்ன ஆக: நின் அருங் கல வெறுக்கை | |
| 
அவை பெறல் வேண்டேம்; அடு போர்ப் பேக! | |
| 
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன் புல | |
| 
நல் நாடு பாட, என்னை நயந்து | |
| 
5 | 
பரிசில் நல்குவைஆயின், குரிசில்! நீ | 
| 
நல்காமையின் நைவரச் சாஅய், | |
| 
அருந் துயர் உழக்கும் நின் திருந்துஇழை அரிவை | |
| 
கலி மயில் கலாவம் கால் குவித்தன்ன, | |
| 
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ, | |
| 
10 | 
தண் கமழ் கோதை புனைய, | 
| 
வண் பரி நெடுந் தேர் பூண்க, நின் மாவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவள் காரணமாக அரிசில் கிழார் பாடியது.
 | 
| 
 230 | 
| 
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும், | |
| 
வெங் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும், | |
| 
களம் மலி குப்பை காப்பு இல வைகவும், | |
| 
விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல், | |
| 
5 | 
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள், | 
| 
பொய்யா எழினி பொருது களம் சேர | |
| 
ஈன்றோள் நீத்த குழவி போல, | |
| 
தன் அமர் சுற்றம் தலைத்தலை இனைய, | |
| 
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு | |
| 
10 | 
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி | 
| 
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம்! | |
| 
வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான், | |
| 
வீழ் குடி உழவன் வித்து உண்டாஅங்கு | |
| 
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின், | |
| 
15 | 
நேரார் பல் உயிர் பருகி, | 
| 
ஆர்குவை மன்னோ, அவன் அமர் அடு களத்தே. | |
| 
திணை அது; துறை கையறு நிலை.
 | |
| 
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினியை அரிசில் கிழார் பாடியது.
 | 
| 
 281 | 
| 
தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ, | |
| 
வாங்கு மருப்பு யாழொடு பல் இயம் கறங்க, | |
| 
கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி, | |
| 
ஐயவி சிதறி, ஆம்பல் ஊதி, | |
| 
5 | 
இசை மணி எறிந்து, காஞ்சி பாடி, | 
| 
நெடு நகர் வரைப்பில் கடி நறை புகைஇ, | |
| 
காக்கம் வம்மோ காதலம் தோழி! | |
| 
வேந்துறு விழுமம் தாங்கிய | |
| 
பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே. | |
| 
திணை காஞ்சி; துறை பேய்க்காஞ்சி.
 | |
| 
அரிசில் கிழார் பாடியது.
 | 
| 
 285 | 
| 
பாசறையீரே! பாசறையீரே! | |
| 
துடியன் கையது வேலே; அடி புணர் | |
| 
வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப் | |
| 
பாணன் கையது தோலே; காண்வரக் | |
| 
5 | 
கடுந் தெற்று மூடையின்...................... | 
| 
வாடிய மாலை மலைந்த சென்னியன்; | |
| 
வேந்து தொழில் அயரும் அருந் தலைச் சுற்றமொடு | |
| 
நெடு நகர் வந்தென, விடு கணை மொசித்த | |
| 
மூரி வெண் தோல் | |
| 
10 | 
சேறுபடு குருதிச் செம்மல் உக்குஓஒ! | 
| 
மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக, | |
| 
நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே; | |
| 
அது கண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலை பணிந்து | |
| 
இறைஞ்சியோனே, குருசில்! பிணங்கு கதிர் | |
| 
15 | 
அலமருங் கழனித் தண்ணடை ஒழிய, | 
| 
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் | |
| 
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே. | |
| 
திணை வாகை; துறை ...............முல்லை.
 | |
| 
அரிசில் கிழார் பாடியது.
 | 
| 
 300 | 
| 
'தோல் தா; தோல் தா' என்றி; தோலொடு | |
| 
துறுகல் மறையினும் உய்குவை போலாய்; | |
| 
நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி, | |
| 
அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன், | |
| 
5 | 
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு | 
| 
ஓர் இல் கோயில் தேருமால் நின்னே. | |
| 
திணை தும்பை; துறை தானை மறம்.
 | |
| 
அரிசில் கிழார் பாடியது.
 | 
| 
 304 | 
| 
கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி, | |
| 
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி, | |
| 
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி | |
| 
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை, | |
| 
5 | 
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு | 
| 
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி, | |
| 
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான் | |
| 
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு, | |
| 
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் | |
| 
10 | 
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று | 
| 
'இரண்டு ஆகாது அவன் கூறியது' எனவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அரிசில் கிழார் பாடியது.
 | 
| 
 342 | 
| 
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும் | |
| 
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள், | |
| 
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று, | |
| 
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை! | |
| 
5 | 
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே | 
| 
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே; | |
| 
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை | |
| 
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின், | |
| 
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை, | |
| 
10 | 
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம், | 
| 
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும் | |
| 
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின், | |
| 
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா, | |
| 
வாள் தக வைகலும் உழக்கும் | |
| 
15 | 
மாட்சியவர், இவள் தன்னைமாரே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அரிசில் கிழார் பாடியது.
 |