|  | தொடக்கம் | 
| 
ஆடுதுறை மாசாத்தனார் | 
| 
 227 | 
| 
நனி பேதையே, நயன் இல் கூற்றம்! | |
| 
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை; | |
| 
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்; | |
| 
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும், | |
| 
5 | 
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய, | 
| 
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின் | |
| 
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல் | |
| 
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் | |
| 
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி | |
| 
10 | 
இனையோற் கொண்டனைஆயின், | 
| 
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.
 |