|  | தொடக்கம் | 
| 
ஆலங்குடி வங்கனார் | 
| 
 319 | 
| 
பூவல் படுவில் கூவல் தோண்டிய | |
| 
செங் கண் சில் நீர் பெய்த சீறில் | |
| 
முன்றில் இருந்த முது வாய்ச் சாடி | |
| 
யாம் கஃடு உண்டென, வறிது மாசு இன்று; | |
| 
5 | 
படலை முன்றில் சிறு தினை உணங்கல் | 
| 
புறவும் இதலும் அறவும் உண்கெனப் | |
| 
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனான், | |
| 
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம்; புகுதந்து | |
| 
ஈங்கு இருந்தீமோ, முது வாய்ப் பாண! | |
| 
10 | 
கொடுங் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி | 
| 
புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும் | |
| 
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர், | |
| 
வேந்து விடு தொழிலொடு சென்றனன்; வந்து, நின் | |
| 
பாடினி மாலை அணிய, | |
| 
15 | 
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஆலங்குடி வங்கனார் பாடியது.
 |