| முகப்பு | தொடக்கம் | 
| 
ஆவூர் கிழார் | 
| 
 322 | 
| 
உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன | |
| 
கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்தி, | |
| 
புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் | |
| 
புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின், | |
| 
5 | 
பெருங் கண் குறு முயல் கருங் கலன் உடைய | 
| 
மன்றில் பாயும் வன் புலத்ததுவே | |
| 
கரும்பின் எந்திரம் சிலைப்பின், அயலது. | |
| 
இருஞ் சுவல் வாளை பிறழும் ஆங்கண், | |
| 
தண் பணை ஆளும் வேந்தர்க்குக் | |
| 
10 | 
கண் படை ஈயா வேலோன் ஊரே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஆவூர் கிழார் பாடியது.
 |