| முகப்பு | தொடக்கம் | 
| 
இடைக்காடனார் | 
| 
 42 | 
| 
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின் | |
| 
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின் | |
| 
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை | |
| 
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து | |
| 
5 | 
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின், | 
| 
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே; | |
| 
தண் புனல் பூசல் அல்லது, நொந்து, | |
| 
'களைக, வாழி, வளவ!' என்று, நின் | |
| 
முனைதரு பூசல் கனவினும் அறியாது, | |
| 
10 | 
புலி புறங்காக்கும் குருளை போல, | 
| 
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப, | |
| 
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர் | |
| 
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர் | |
| 
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர் | |
| 
15 | 
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை | 
| 
நீர் தரு மகளிர் குற்ற குவளையும், | |
| 
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும் | |
| 
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந! | |
| 
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி, | |
| 
20 | 
நில வரை இழிதரும் பல் யாறு போல, | 
| 
புலவர் எல்லாம் நின் நோக்கினரே; | |
| 
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் | |
| 
கூற்று வெகுண்டன்ன முன்பொடு, | |
| 
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே. | |
| 
திணை வாகை; துறை அரசவாகை.
 | |
| 
அவனை இடைக்காடனார் பாடியது.
 |