| முகப்பு | தொடக்கம் | 
| 
இரும்பிடர்த்தலையார் | 
| 
 3 | 
| 
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை | |
| 
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற, | |
| 
ஏம முரசம் இழுமென முழங்க, | |
| 
நேமி உய்த்த நேஎ நெஞ்சின், | |
| 
5 | 
தவிரா ஈகை, கவுரியர் மருக! | 
| 
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ! | |
| 
பொன் ஓடைப் புகர் அணி நுதல், | |
| 
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து, | |
| 
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ, | |
| 
10 | 
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின், | 
| 
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து, | |
| 
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக் | |
| 
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி! | |
| 
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்; | |
| 
15 | 
பொலங் கழற் கால், புலர் சாந்தின் | 
| 
விலங்கு அகன்ற வியல் மார்ப! | |
| 
ஊர் இல்ல, உயவு அரிய, | |
| 
நீர் இல்ல, நீள் இடைய, | |
| 
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின், | |
| 
20 | 
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர் | 
| 
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை, | |
| 
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் | |
| 
உன்ன மரத்த துன் அருங் கவலை, | |
| 
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது | |
| 
25 | 
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர் | 
| 
இன்மை தீர்த்தல் வன்மையானே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.
 |