| முகப்பு | தொடக்கம் | 
| 
உலோச்சனார் | 
| 
 258 | 
| 
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத் | |
| 
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் | |
| 
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு, | |
| 
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த | |
| 
5 | 
எச்சில் ஈர்ங் கை வில்புறம் திமிரி, | 
| 
புலம் புக்கனனே, புல் அணல் காளை; | |
| 
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை | |
| 
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும் | |
| 
தொடுதல் ஓம்புமதி, முது கள் சாடி; | |
| 
10 | 
ஆ தரக் கழுமிய துகளன், | 
| 
காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
......................உலோச்சனார் பாடியது.
 | 
| 
 274 | 
| 
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை, | |
| 
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் | |
| 
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே, | |
| 
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் | |
| 
5 | 
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர, | 
| 
கையின் வாங்கி, தழீஇ, | |
| 
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே! | |
| 
திணை அது; துறை எருமை மறம்.
 | |
| 
உலோச்சனார் பாடியது.
 | 
| 
 377 | 
| 
பனி பழுநிய பல் யாமத்துப் | |
| 
பாறு தலை மயிர் நனைய, | |
| 
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின், | |
| 
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி, | |
| 
5 | 
'அவி உணவினோர் புறங்காப்ப, | 
| 
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று, | |
| 
அதற் கொண்டு வரல் ஏத்தி, | |
| 
'''கரவு இல்லாக் கவி வண் கையான், | |
| 
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர் | |
| 
10 | 
பிறர்க்கு உவமம் தான் அல்லது, | 
| 
தனக்கு உவமம் பிறர் இல்' என, | |
| 
அது நினைந்து, மதி மழுகி, | |
| 
ஆங்கு நின்ற எற் காணூஉச் | |
| 
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை! | |
| 
15 | 
நீ புரவலை, எமக்கு' என்ன, | 
| 
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், | |
| 
கடல் பயந்த கதிர் முத்தமும், | |
| 
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும், | |
| 
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப, | |
| 
20 | 
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்; | 
| 
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்; | |
| 
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்; | |
| 
.........................பொற் கோட்டு யானையர், | |
| 
கவர் பரிக் கச்சை நல் மான், | |
| 
25 | 
வடி மணி, வாங்கு உருள, | 
| 
.....................,..........நல் தேர்க் குழுவினர், | |
| 
கதழ் இசை வன்கணினர், | |
| 
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி, | |
| 
கடல் ஒலி கொண்ட தானை | |
| 
30 | 
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே! | 
| 
திணை அது; துறை வாழ்த்தியல்.
 | |
| 
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.
 |