| முகப்பு | தொடக்கம் | 
| 
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் | 
| 
 27 | 
| 
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், | |
| 
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன, | |
| 
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து, | |
| 
வீற்றிருந்தோரை எண்ணும்காலை, | |
| 
5 | 
உரையும் பாட்டும் உடையோர் சிலரே; | 
| 
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே; | |
| 
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் | |
| 
வலவன் ஏவா வான ஊர்தி | |
| 
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக் | |
| 
10 | 
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! | 
| 
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், | |
| 
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், | |
| 
அறியாதோரையும் அறியக் காட்டி, | |
| 
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து, | |
| 
15 | 
வல்லார் ஆயினும், வல்லுநர்ஆயினும், | 
| 
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, | |
| 
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர் | |
| 
கொடாஅமை வல்லர் ஆகுக; | |
| 
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே. | |
| 
திணை பொதுவியல்; துறை முதுமொழிக்காஞ்சி.
 | |
| 
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
 | 
| 
 28 | 
| 
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும், | |
| 
கூனும், குறளும், ஊமும், செவிடும், | |
| 
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு | |
| 
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் | |
| 
5 | 
பேதைமை அல்லது ஊதியம் இல்' என, | 
| 
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும், | |
| 
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது | |
| 
வட்ட வரிய செம் பொறிச் சேவல் | |
| 
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் | |
| 
10 | 
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே, | 
| 
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர் | |
| 
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் | |
| 
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர் | |
| 
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே; | |
| 
15 | 
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் | 
| 
ஆற்றும், பெரும! நின் செல்வம்; | |
| 
ஆற்றாமை நிற் போற்றாமையே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 29 | 
| 
அழல் புரிந்த அடர் தாமரை | |
| 
ஐது அடர்ந்த நூல் பெய்து, | |
| 
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் | |
| 
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, | |
| 
5 | 
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! | 
| 
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் | |
| 
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க | |
| 
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, | |
| 
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், | |
| 
10 | 
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, | 
| 
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் | |
| 
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! | |
| 
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் | |
| 
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, | |
| 
15 | 
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் | 
| 
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு | |
| 
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் | |
| 
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து, | |
| 
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் | |
| 
20 | 
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு | 
| 
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை | |
| 
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் | |
| 
கோடியர் நீர்மை போல முறைமுறை | |
| 
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய | |
| 
25 | 
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! | 
| 
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 30 | 
| 
செஞ் ஞாயிற்றுச் செலவும், | |
| 
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும், | |
| 
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும், | |
| 
வளி திரிதரு திசையும், | |
| 
5 | 
வறிது நிலைஇய காயமும், என்று இவை | 
| 
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும் | |
| 
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும் | |
| 
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி, | |
| 
களிறு கவுள் அடுத்த எறிகல் போல | |
| 
10 | 
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட | 
| 
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு | |
| 
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது | |
| 
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் | |
| 
இடைப் புலப் பெரு வழிச் சொரியும் | |
| 
15 | 
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே! | 
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 325 | 
| 
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின், | |
| 
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென, | |
| 
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின், | |
| 
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் | |
| 
5 | 
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை, | 
| 
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் | |
| 
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச் | |
| 
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார், | |
| 
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் | |
| 
10 | 
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து, | 
| 
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல், | |
| 
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும் | |
| 
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் | |
| 
வேந்து தலைவரினும் தாங்கும், | |
| 
15 | 
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
 |