| முகப்பு | தொடக்கம் | 
| 
ஊன்பொதி பசுங்குடையார் | 
| 
 10 | 
| 
வழிபடுவோரை வல் அறிதீயே; | |
| 
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே; | |
| 
நீ மெய் கண்ட தீமை காணின்; | |
| 
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி; | |
| 
5 | 
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின், | 
| 
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே | |
| 
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் | |
| 
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை | |
| 
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர் | |
| 
10 | 
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப! | 
| 
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ், | |
| 
நெய்தலங்கானல் நெடியோய்! | |
| 
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
 | 
| 
 203 | 
| 
'கழிந்தது பொழிந்து' என வான் கண்மாறினும், | |
| 
'தொல்லது விளைந்து' என நிலம் வளம் கரப்பினும், | |
| 
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை; | |
| 
'இன்னும் தம்' என எம்மனோர் இரப்பின், | |
| 
5 | 
'முன்னும் கொண்டிர்' என, நும்மனோர் மறுத்தல் | 
| 
இன்னாது அம்ம; இயல் தேர் அண்ணல்! | |
| 
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும், | |
| 
உள்ளி வருநர் நசை இழப்போரே; | |
| 
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார் | |
| 
10 | 
ஆர் எயில் அவர்கட்டாகவும், 'நுமது' எனப் | 
| 
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்! | |
| 
பூண் கடன், எந்தை! நீ இரவலர்ப் புரவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது.
 | 
| 
 370 | 
| 
.............................................ளி, | |
| 
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப் | |
| 
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு | |
| 
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ, | |
| 
5 | 
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து, | 
| 
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல், | |
| 
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் | |
| 
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண், | |
| 
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை, | |
| 
10 | 
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட, | 
| 
பழுமரம் உள்ளிய பறவை போல, | |
| 
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென, | |
| 
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப, | |
| 
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து, | |
| 
15 | 
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி, | 
| 
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி, | |
| 
அதரி திரித்த ஆள் உகு கடாவின், | |
| 
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி, | |
| 
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி, | |
| 
20 | 
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின் | 
| 
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும! | |
| 
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த | |
| 
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார் | |
| 
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி, | |
| 
25 | 
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு | 
| 
செஞ் செவி எருவை திரிதரும், | |
| 
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
 | 
| 
 378 | 
| 
தென் பரதவர் மிடல் சாய, | |
| 
வட வடுகர் வாள் ஓட்டிய, | |
| 
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை, | |
| 
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின், | |
| 
5 | 
நல் தார், கள்ளின், சோழன் கோயில், | 
| 
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து, | |
| 
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என் | |
| 
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி, | |
| 
எஞ்சா மரபின் வஞ்சி பாட, | |
| 
10 | 
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல, | 
| 
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை | |
| 
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு, | |
| 
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், | |
| 
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும், | |
| 
15 | 
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், | 
| 
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், | |
| 
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், | |
| 
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை | |
| 
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, | |
| 
20 | 
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் | 
| 
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, | |
| 
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே | |
| 
இருங் கிளைத் தலைமை எய்தி, | |
| 
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.
 |