| முகப்பு | தொடக்கம் | 
| 
ஒக்கூர் மாசாத்தியார் | 
| 
 279 | 
| 
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே; | |
| 
மூதில் மகளிர் ஆதல் தகுமே: | |
| 
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை, | |
| 
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே; | |
| 
5 | 
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், | 
| 
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே; | |
| 
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி, | |
| 
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ, | |
| 
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி, | |
| 
10 | 
ஒரு மகன் அல்லது இல்லோள், | 
| 
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே! | |
| 
திணை வாகை; துறை மூதில் முல்லை.
 | |
| 
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.
 |