| முகப்பு | தொடக்கம் | 
| 
ஒரு சிறைப் பெரியனார் | 
| 
 137 | 
| 
இரங்கு முரசின், இனம்சால் யானை, | |
| 
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை | |
| 
இன்னும் ஓர் யான் அவா அறியேனே; | |
| 
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய | |
| 
5 | 
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது, | 
| 
கழைக் கரும்பின் ஒலிக்குந்து, | |
| 
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும், | |
| 
கண் அன்ன மலர் பூக்குந்து, | |
| 
கருங் கால் வேங்கை மலரின், நாளும் | |
| 
10 | 
பொன் அன்ன வீ சுமந்து, | 
| 
மணி அன்ன நீர் கடல் படரும்; | |
| 
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந! | |
| 
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை! | |
| 
நீ வாழியர்! நின் தந்தை | |
| 
15 | 
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே! | 
| 
திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
 | |
| 
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.
 |