| முகப்பு | தொடக்கம் | 
| 
ஒரூஉத்தனார் | 
| 
 275 | 
| 
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும், | |
| 
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும், | |
| 
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய | |
| 
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன் | |
| 
5 | 
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி, | 
| 
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது, | |
| 
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப, | |
| 
கன்று அமர் கறவை மான, | |
| 
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஒரூஉத்தனார் பாடியது.
 |