| முகப்பு | தொடக்கம் | 
| 
கணியன் பூங்குன்றனார் | 
| 
 192 | 
| 
யாதும் ஊரே; யாவரும் கேளிர்; | |
| 
தீதும் நன்றும் பிறர் தர வாரா; | |
| 
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன; | |
| 
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல் | |
| 
5 | 
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின், | 
| 
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு | |
| 
வானம் தண் துளி தலை இ, ஆனாது | |
| 
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று | |
| 
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர் | |
| 
10 | 
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர் | 
| 
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் | |
| 
பெரியோரை வியத்தலும் இலமே; | |
| 
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கணியன் பூங்குன்றன் பாட்டு.
 |