| முகப்பு | தொடக்கம் | 
| 
கபிலர் | 
| 
 8 | 
| 
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக, | |
| 
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது, | |
| 
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப, | |
| 
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை, | |
| 
5 | 
கடந்து அடு தானைச் சேரலாதனை | 
| 
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்! | |
| 
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி; | |
| 
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி; | |
| 
அகல் இரு விசும்பினானும் | |
| 
10 | 
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே. | 
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
 | |
| 
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
 | 
| 
 14 | 
| 
கடுங் கண்ண கொல் களிற்றால் | |
| 
காப்பு உடைய எழு முருக்கி, | |
| 
பொன் இயல் புனை தோட்டியால் | |
| 
முன்பு துரந்து, சமம் தாங்கவும்; | |
| 
5 | 
பார் உடைத்த குண்டு அகழி | 
| 
நீர் அழுவ நிவப்புக் குறித்து, | |
| 
நிமிர் பரிய மா தாங்கவும்; | |
| 
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் | |
| 
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்; | |
| 
10 | 
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்! | 
| 
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை. | |
| 
புலவு நாற்றத்த பைந் தடி | |
| 
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை | |
| 
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது, | |
| 
15 | 
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும் | 
| 
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு | |
| 
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு | |
| 
இரு நிலத்து அன்ன நோன்மை, | |
| 
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.
 | 
| 
 105 | 
| 
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி! | |
| 
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை | |
| 
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப் | |
| 
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி | |
| 
5 | 
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக, | 
| 
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும் | |
| 
நீரினும் இனிய சாயல் | |
| 
பாரி வேள்பால் பாடினை செலினே. | |
| 
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
 | |
| 
வேள் பாரியைக் கபிலர் பாடியது.
 | 
| 
 106 | 
| 
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் | |
| 
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை | |
| 
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு, | |
| 
மடவர் மெல்லியர் செல்லினும், | |
| 
5 | 
கடவன், பாரி கை வண்மையே. | 
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 107 | 
| 
'பாரி பாரி' என்று பல ஏத்தி, | |
| 
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்; | |
| 
பாரி ஒருவனும் அல்லன்; | |
| 
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 108 | 
| 
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி | |
| 
ஆரம் ஆதலின், அம் புகை அயலது | |
| 
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும் | |
| 
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு, | |
| 
5 | 
பாரியும், பரிசிலர் இரப்பின், | 
| 
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 109 | 
| 
அளிதோதானே, பாரியது பறம்பே! | |
| 
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், | |
| 
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே: | |
| 
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே; | |
| 
5 | 
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; | 
| 
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; | |
| 
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, | |
| 
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. | |
| 
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, | |
| 
10 | 
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, | 
| 
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், | |
| 
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், | |
| 
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; | |
| 
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: | |
| 
15 | 
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, | 
| 
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, | |
| 
ஆடினிர் பாடினிர் செலினே, | |
| 
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. | |
| 
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 110 | 
| 
கடந்து அடு தானை மூவிரும் கூடி | |
| 
உடன்றனிர் ஆயினும், பறம்பு கொளற்கு அரிதே; | |
| 
முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு; | |
| 
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்; | |
| 
5 | 
யாமும் பாரியும் உளமே; | 
| 
குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
மூவேந்தரும் பறம்பு முற்றியிருந்தாரை அவர் பாடியது.
 | 
| 
 111 | 
| 
அளிதோ தானே, பேர் இருங் குன்றே! | |
| 
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; | |
| 
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் | |
| 
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 113 | 
| 
மட்டு வாய் திறப்பவும், மை விடை வீழ்ப்பவும், | |
| 
அட்டு ஆன்று ஆனாக் கொழுந் துவை ஊன் சோறும் | |
| 
பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி, | |
| 
நட்டனை மன்னோ, முன்னே; இனியே, | |
| 
5 | 
பாரி மாய்ந்தென, கலங்கிக் கையற்று, | 
| 
நீர் வார் கண்ணேம் தொழுது நிற் பழிச்சிச் | |
| 
சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே! | |
| 
கோல் திரள் முன் கைக் குறுந் தொடி மகளிர் | |
| 
நாறு இருங் கூந்தல் கிழவரைப் படர்ந்தே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுக்கக் கொண்டுபோவான் பறம்பு விடுத்த கபிலர் பாடியது.
 | 
| 
 114 | 
| 
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை | |
| 
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற | |
| 
களிறு மென்று இட்ட கவளம் போல, | |
| 
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல் | |
| 
5 | 
வார் அசும்பு ஒழுகும் முன்றில், | 
| 
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.
 | 
| 
 115 | 
| 
ஒரு சார் அருவி ஆர்ப்ப, ஒரு சார் | |
| 
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார், | |
| 
வாக்க உக்க தேக் கள் தேறல் | |
| 
கல் அலைத்து ஒழுகும்மன்னே! பல் வேல், | |
| 
5 | 
அண்ணல் யானை, வேந்தர்க்கு | 
| 
இன்னான் ஆகிய இனியோன் குன்றே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 116 | 
| 
தீம் நீர்ப் பெருங் குண்டு சுனைப் பூத்த குவளைக் | |
| 
கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல், | |
| 
ஏந்து எழில் மழைக் கண், இன் நகை, மகளிர் | |
| 
புல் மூசு கவலைய முள் மிடை வேலி, | |
| 
5 | 
பஞ்சி முன்றில், சிற்றில் ஆங்கண், | 
| 
பீரை நாறிய சுரை இவர் மருங்கின், | |
| 
ஈத்து இலைக் குப்பை ஏறி, உமணர் | |
| 
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ; | |
| 
நோகோ யானே; தேய்கமா, காலை! | |
| 
10 | 
பயில் பூஞ் சோலை மயில் எழுந்து ஆலவும், | 
| 
பயில் இருஞ் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும், | |
| 
கலையும் கொள்ளாவாக, பலவும் | |
| 
காலம் அன்றியும் மரம் பயம் பகரும் | |
| 
யாணர் அறாஅ வியல் மலை அற்றே | |
| 
15 | 
அண்ணல் நெடு வரை ஏறி, தந்தை | 
| 
பெரிய நறவின், கூர் வேல் பாரியது | |
| 
அருமை அறியார், போர் எதிர்ந்து வந்த | |
| 
வலம் படு தானை வேந்தர் | |
| 
பொலம் படைக் கலி மா எண்ணுவோரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 117 | 
| 
மைம்மீன் புகையினும், தூமம் தோன்றினும், | |
| 
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும், | |
| 
வயலகம் நிறைய, புதல் பூ மலர, | |
| 
மனைத்தலை மகவை ஈன்ற அமர்க் கண் | |
| 
5 | 
ஆமா நெடு நிரை நன் புல் ஆர, | 
| 
கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி, | |
| 
பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே | |
| 
பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் | |
| 
பாசிலை முல்லை முகைக்கும் | |
| 
10 | 
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 118 | 
| 
அறையும் பொறையும் மணந்த தலைய, | |
| 
எண் நாள் திங்கள் அனைய கொடுங் கரைத் | |
| 
தெள் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ | |
| 
கூர் வேல் குவைஇய மொய்ம்பின் | |
| 
5 | 
தேர் வண் பாரி தண் பறம்பு நாடே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 119 | 
| 
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை, | |
| 
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப, | |
| 
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து; | |
| 
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ | |
| 
5 | 
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல, | 
| 
பணை கெழு வேந்தரை இறந்தும் | |
| 
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 120 | 
| 
வெப்புள் விளைந்த வேங்கைச் செஞ் சுவல் | |
| 
கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்து, | |
| 
பூழி மயங்கப் பல உழுது, வித்தி, | |
| 
பல்லி ஆடிய பல் கிளைச் செவ்விக் | |
| 
5 | 
களை கால் கழாலின், தோடு ஒலிபு நந்தி, | 
| 
மென் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடி, | |
| 
கருந் தாள் போகி, ஒருங்கு பீள் விரிந்து, | |
| 
கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து, | |
| 
வாலிதின் விளைந்த புது வரகு அரிய, | |
| 
10 | 
தினை கொய்ய, கவ்வை கறுப்ப, அவரைக் | 
| 
கொழுங் கொடி விளர்க் காய் கோட் பதம் ஆக, | |
| 
நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் | |
| 
புல் வேய்க் குரம்பைக் குடிதொறும் பகர்ந்து, | |
| 
நறு நெய்க் கடலை விசைப்ப, சோறு அட்டு, | |
| 
15 | 
பெருந்தோள் தாலம் பூசல் மேவர, | 
| 
வருந்தா யாணர்த்து; நந்தும்கொல்லோ | |
| 
இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை | |
| 
ஆடு கழை நரலும் சேட் சிமை, புலவர் | |
| 
பாடி ஆனாப் பண்பின் பகைவர் | |
| 
20 | 
ஓடு கழல் கம்பலை கண்ட | 
| 
செரு வெஞ் சேஎய் பெரு விறல் நாடே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 121 | 
| 
ஒரு திசை ஒருவனை உள்ளி, நால் திசைப் | |
| 
பலரும் வருவர், பரிசில் மாக்கள்; | |
| 
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும் | |
| 
ஈதல் எளிதே; மா வண் தோன்றல்! | |
| 
5 | 
அது நற்கு அறிந்தனைஆயின், | 
| 
பொது நோக்கு ஒழிமதி, புலவர் மாட்டே! | |
| 
திணை அது; துறை பொருண் மொழிக் காஞ்சி.
 | |
| 
மலையமான் திருமுடிக்காரியைக் கபிலர் பாடியது.
 | 
| 
 122 | 
| 
கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார், | |
| 
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே; | |
| 
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே; | |
| 
வீயாத் திருவின் விறல் கெழு தானை | |
| 
5 | 
மூவருள் ஒருவன், 'துப்பு ஆகியர்' என, | 
| 
ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி | |
| 
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே; | |
| 
வடமீன் புரையும் கற்பின், மட மொழி, | |
| 
அரிவை தோள் அளவு அல்லதை, | |
| 
10 | 
நினது என இலை நீ பெருமிதத்தையே. | 
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 123 | 
| 
நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின், | |
| 
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே; | |
| 
தொலையா நல் இசை விளங்கு மலையன் | |
| 
மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர் | |
| 
5 | 
பயன் கெழு முள்ளூர் மீமிசைப் | 
| 
பட்ட மாரி உறையினும் பலவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 124 | 
| 
நாள் அன்று போகி, புள் இடை தட்ப, | |
| 
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும், | |
| 
வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப் | |
| 
பாடு ஆன்று, இரங்கும் அருவிப் | |
| 
5 | 
பீடு கெழு மலையன் பாடியோரே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 143 | 
| 
'மலை வான் கொள்க!' என, உயர் பலி தூஉய், | |
| 
'மாரி ஆன்று, மழை மேக்கு உயர்க!' எனக் | |
| 
கடவுள் பேணிய குறவர் மாக்கள், | |
| 
பெயல் கண்மாறிய உவகையர், சாரல் | |
| 
5 | 
புனத் தினை அயிலும் நாட! சினப் போர்க் | 
| 
கை வள் ஈகைக் கடு மான் பேக! | |
| 
யார்கொல் அளியள்தானே நெருநல், | |
| 
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தென, | |
| 
குணில் பாய் முரசின் இரங்கும் அருவி | |
| 
10 | 
நளி இருஞ் சிலம்பின் சீறூர் ஆங்கண், | 
| 
வாயில் தோன்றி, வாழ்த்தி நின்று, | |
| 
நின்னும் நின் மலையும் பாட, இன்னாது | |
| 
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள், | |
| 
முலையகம் நனைப்ப, விம்மி, | |
| 
15 | 
குழல் இனைவதுபோல் அழுதனள், பெரிதே? | 
| 
திணை பெருந்திணை; துறை குறுங்கலி; தாபதநிலையும் ஆம்.
 | |
| 
அவனால் துறக்கப்பட்ட கண்ணகி காரணமாக அவனைக் கபிலர் பாடியது.
 | 
| 
 200 | 
| 
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின் | |
| 
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் | |
| 
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி, | |
| 
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து, | |
| 
5 | 
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப! | 
| 
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல், | |
| 
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை, | |
| 
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே! | |
| 
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை | |
| 
10 | 
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும், | 
| 
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த | |
| 
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்; | |
| 
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே, | |
| 
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்; | |
| 
15 | 
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர் | 
| 
அடங்கா மன்னரை அடக்கும் | |
| 
மடங்கா விளையுள் நாடு கிழவோயே! | |
| 
திணை அது; துறை பரிசில் துறை.
 | |
| 
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
 | 
| 
 201 | 
| 
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே, | |
| 
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன் | |
| 
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை, | |
| 
படு மணி யானை, பறம்பின் கோமான் | |
| 
5 | 
நெடு மாப் பாரி மகளிர்; யானே | 
| 
தந்தை தோழன்; இவர் என் மகளிர்; | |
| 
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே. | |
| 
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி, | |
| 
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை, | |
| 
10 | 
உவரா ஈகை, துவரை ஆண்டு, | 
| 
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த | |
| 
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்! | |
| 
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே! | |
| 
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய | |
| 
15 | 
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்! | 
| 
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து | |
| 
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல் | |
| 
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல் | |
| 
உடலுநர் உட்கும் தானை, | |
| 
20 | 
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.
 | 
| 
 202 | 
| 
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட, | |
| 
கட்சி காணாக் கடமா நல் ஏறு | |
| 
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர, | |
| 
கடிய கதழும் நெடு வரைப் படப்பை | |
| 
5 | 
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி, | 
| 
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர், | |
| 
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய | |
| 
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி: | |
| 
நுந்தை தாயம் நிறைவுற எய்திய | |
| 
10 | 
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்! | 
| 
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் | |
| 
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை | |
| 
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்! | |
| 
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர் | |
| 
15 | |
| 
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும! | |
| 
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து, | |
| 
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை | |
| 
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் | |
| 
20 | 
இரும் புலி வரிப் புறம் கடுக்கும் | 
| 
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.
 | 
| 
 236 | 
| 
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம் | |
| 
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் | |
| 
மலை கெழு நாட! மா வண் பாரி! | |
| 
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் | |
| 
5 | 
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே | 
| 
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, | |
| 
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி, | |
| 
இனையைஆதலின் நினக்கு மற்று யான் | |
| 
மேயினேன் அன்மையானே; ஆயினும், | |
| 
10 | 
இம்மை போலக் காட்டி, உம்மை | 
| 
இடை இல் காட்சி நின்னோடு | |
| 
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! | |
| 
திணை அது; துறை கையறுநிலை.
 | |
| 
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
 | 
| 
 237 | 
| 
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி, | |
| 
பாடி நின்ற பசி நாட்கண்ணே, | |
| 
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி, | |
| 
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல் | |
| 
5 | 
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என | 
| 
நச்சி இருந்த நசை பழுதாக, | |
| 
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு, | |
| 
'அளியர்தாமே ஆர்க' என்னா | |
| 
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய, | |
| 
10 | 
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் | 
| 
வாழைப் பூவின் வளை முறி சிதற, | |
| 
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க, | |
| 
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, | |
| 
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே: | |
| 
15 | 
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப் | 
| 
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின், | |
| 
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக் | |
| 
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று, | |
| 
நனியுடைப் பரிசில் தருகம், | |
| 
20 | 
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.
 | 
| 
 347 | 
| 
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில | |
| 
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த | |
| 
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை, | |
| 
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின், | |
| 
5 | 
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை, | 
| 
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன | |
| 
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப, | |
| 
............................................ | |
| 
என் ஆவதுகொல் தானே?..................................... | |
| 
10 | 
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர் | 
| 
வினை நவில் யானை பிணிப்ப, | |
| 
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
கபிலர் பாடியது.
 |