| முகப்பு | தொடக்கம் | 
| 
கயமனார் | 
| 
 254 | 
| 
இளையரும் முதியரும் வேறு புலம் படர, | |
| 
எடுப்ப எழாஅய், மார்பம் மண் புல்ல, | |
| 
இடைச் சுரத்து இறுத்த மள்ள! விளர்த்த | |
| 
வளை இல் வறுங் கை ஓச்சி, கிளையுள், | |
| 
5 | 
'இன்னன் ஆயினன், இளையோன்' என்று, | 
| 
நின் உரை செல்லும் ஆயின், 'மற்று | |
| 
முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்து, | |
| 
புள் ஆர் யாணர்த்தற்றே, என் மகன் | |
| 
வளனும் செம்மலும் எமக்கு' என, நாளும் | |
| 
10 | 
ஆனாது புகழும் அன்னை | 
| 
யாங்கு ஆகுவள்கொல்? அளியள் தானே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
...................கயமனார் பாடியது.
 |