| முகப்பு | தொடக்கம் | 
| 
கருவூர்க் கதப்பிள்ளை | 
| 
 380 | 
| 
தென் பவ்வத்து முத்துப் பூண்டு, | |
| 
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ, | |
| 
........................................ங் கடல் தானை, | |
| 
இன் இசைய விறல் வென்றி, | |
| 
5 | 
தென்னவர் வய மறவன்; | 
| 
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து, | |
| 
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய, | |
| 
வேறுபெ.............................................த்துந்து, | |
| 
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்; | |
| 
10 | 
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்; | 
| 
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்; | |
| 
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல, | |
| 
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்; | |
| 
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம் | |
| 
15 | 
இலம்படு காலை ஆயினும், | 
| 
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.
 |