| முகப்பு | தொடக்கம் | 
| 
கல்லாடனார் | 
| 
 23 | 
| 
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ, | |
| 
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்; | |
| 
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல், | |
| 
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின் | |
| 
5 | 
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் | 
| 
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில் | |
| 
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்; | |
| 
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும் | |
| 
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர் | |
| 
10 | 
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப, | 
| 
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி, | |
| 
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று, | |
| 
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும் | |
| 
துன்னல் போகிய துணிவினோன்' என, | |
| 
15 | 
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை | 
| 
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட | |
| 
கால முன்ப! நின் கண்டனென் வருவல் | |
| 
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென, | |
| 
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை | |
| 
20 | 
பூளை நீடிய வெருவரு பறந்தலை | 
| 
வேளை வெண் பூக் கறிக்கும் | |
| 
ஆள் இல் அத்தம் ஆகிய காடே. | |
| 
திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
 | |
| 
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
 | 
| 
 25 | 
| 
மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல | |
| 
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது, | |
| 
உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு, | |
| 
நிலவுத் திகழ் மதியமொடு, நிலம் சேர்ந்தாஅங்கு, | |
| 
5 | 
உடல் அருந் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை | 
| 
அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணி, | |
| 
பிணியுறு முரசம் கொண்ட காலை, | |
| 
நிலை திரிபு எறிய, திண் மடை கலங்கிச் | |
| 
சிதைதல் உய்ந்தன்றோ, நின் வேல் செழிய! | |
| 
10 | 
முலை பொலி ஆகம் உருப்ப நூறி, | 
| 
மெய்ம் மறந்து பட்ட வரையாப் பூசல் | |
| 
ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர, | |
| 
அவிர் அறல் கடுக்கும் அம் மென் | |
| 
குவை இருங் கூந்தல் கொய்தல் கண்டே. | |
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவனைக் கல்லாடனார் பாடியது.
 | 
| 
 371 | 
| 
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது, | |
| 
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி, | |
| 
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து, | |
| 
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி, | |
| 
5 | 
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய் | 
| 
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி, | |
| 
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப, | |
| 
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன், | |
| 
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி, | |
| 
10 | 
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப, | 
| 
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ, | |
| 
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை, | |
| 
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி, | |
| 
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து, | |
| 
15 | 
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி | 
| 
அதரி திரித்த ஆள் உகு கடாவின், | |
| 
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி | |
| 
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின், | |
| 
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை, | |
| 
20 | 
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும! | 
| 
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி, | |
| 
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள், | |
| 
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின | |
| 
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து | |
| 
25 | 
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என, | 
| 
உரு கெழு பேய்மகள் அயர, | |
| 
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
 | 
| 
 385 | 
| 
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப, | |
| 
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி, | |
| 
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை, | |
| 
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி, | |
| 
5 | 
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை | 
| 
நீல் நிறச் சிதாஅர் களைந்து, | |
| 
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே; | |
| 
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை | |
| 
நெல் விளை கழனி அம்பர் கிழவோன், | |
| 
10 | 
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய | 
| 
வேங்கட விறல் வரைப் பட்ட | |
| 
ஓங்கல் வானத்து உறையினும் பலவே! | |
| 
திணை அது; துறை வாழ்த்தியல்.
 | |
| 
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.
 | 
| 
 391 | 
| 
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் | |
| 
விண்டு அனைய விண் தோய் பிறங்கல் | |
| 
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் | |
| 
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற | |
| 
5 | 
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி, | 
| 
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் | |
| 
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென, | |
| 
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் | |
| 
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி | |
| 
10 | 
நன............................................வினவலின், | 
| 
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும் | |
| 
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என, | |
| 
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற, | |
| 
காண்கு வந்திசின், பெரும!........................... | |
| 
15 | 
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும் | 
| 
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் | |
| 
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின், | |
| 
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு, | |
| 
இன் துயி........................... ஞ்சால் | |
| 
20 | 
துளி பதன் அறிந்து பொழிய, | 
| 
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே! | |
| 
திணை அது; துறை கடைநிலை.
 | |
| 
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.
 |