| முகப்பு | தொடக்கம் | 
| 
கழாத்தலையார் | 
| 
 62 | 
| 
வரு தார் தாங்கி, அமர் மிகல் யாவது? | |
| 
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு, | |
| 
குருதி செங் கைக் கூந்தல் தீட்டி, | |
| 
நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் | |
| 
5 | 
எடுத்து எறி அனந்தல் பறைச் சீர் தூங்க, | 
| 
பருந்து அருந்துற்ற தானையொடு, செரு முனிந்து, | |
| 
அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர் | |
| 
தாம் மாய்ந்தனரே; குடை துளங்கினவே; | |
| 
உரைசால் சிறப்பின் முரைசு ஒழிந்தனவே; | |
| 
10 | 
பல் நூறு அடுக்கிய வேறு படு பைஞ் ஞிலம் | 
| 
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை, | |
| 
களம் கொளற்கு உரியோர் இன்றி, தெறுவர, | |
| 
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும் | |
| 
பாசடகு மிசையார், பனி நீர் மூழ்கார், | |
| 
15 | 
மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே; | 
| 
வாடாப் பூவின், இமையா நாட்டத்து, | |
| 
நாற்ற உணவினோரும் ஆற்ற | |
| 
அரும் பெறல் உலகம் நிறைய | |
| 
விருந்து பெற்றனரால்; பொலிக, நும் புகழே! | |
| 
திணை தும்பை; துறை தொகை நிலை.
 | |
| 
சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வேற் பல் தடக்கைப் பெருவிறற்கிள்ளியும், போர்ப்புறத்துப் பொருது வீழ்ந்தாரைக் கழாத்தலையார் பாடியது.
 | 
| 
 65 | 
| 
மண் முழா மறப்ப, பண் யாழ் மறப்ப, | |
| 
இருங் கண் குழிசி கவிழ்ந்து இழுது மறப்ப, | |
| 
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப, | |
| 
உழவர் ஓதை மறப்ப, விழவும் | |
| 
5 | 
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப, | 
| 
உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து, | |
| 
இரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர் | |
| 
புன்கண் மாலை மலை மறைந்தாங்கு, | |
| 
தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த | |
| 
10 | 
புறப் புண் நாணி, மறத் தகை மன்னன் | 
| 
வாள் வடக்கிருந்தனன்; ஈங்கு, | |
| 
நாள் போல் கழியல, ஞாயிற்றுப் பகலே. | |
| 
திணை பொதுவியல்; துறை கையறு நிலை.
 | |
| 
சேரமான் பெருஞ் சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது, புறப் புண் நாணி, வடக்கிருந்தானைக் கழாத்தலையார் பாடியது.
 | 
| 
 270 | 
| 
பல் மீன் இமைக்கும் மாக விசும்பின் | |
| 
இரங்கு முரசின், இனம்சால் யானை, | |
| 
நிலம் தவ உருட்டிய நேமியோரும் | |
| 
சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே | |
| 
5 | 
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச் | 
| 
சிறுவர் தாயே! பேரில் பெண்டே! | |
| 
நோகோ யானே; நோக்குமதி நீயே; | |
| 
மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை | |
| 
இன் இசை கேட்ட துன் அரு மறவர் | |
| 
10 | 
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார், | 
| 
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை, | |
| 
விழு நவி பாய்ந்த மரத்தின், | |
| 
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே. | |
| 
திணை கரந்தை; துறை கையறு நிலை. | |
| 
(கண்டார் தாய்க்குச் சொல்லியது)
 | |
| 
கழாத்தலையார் பாடியது.
 | 
| 
 288 | 
| 
மண் கொள வரிந்த வைந் நுதி மருப்பின் | |
| 
அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து, | |
| 
வென்றதன் பச்சை சீவாது போர்த்த | |
| 
திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க, | |
| 
5 | 
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின், தெறுவர, | 
| 
நெடு வேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து, | |
| 
அருகுகை ...................................... மன்ற | |
| 
குருதியொடு துயல்வரு மார்பின் | |
| 
முயக்கிடை ஈயாது மொய்த்தன, பருந்தே. | |
| 
திணை தும்பை; துறை மூதில் முல்லை.
 | |
| 
கழாத்தலையார் பாடியது.
 | 
| 
 289 | 
| 
ஈரச் செவ்வி உதவினஆயினும், | |
| 
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி, | |
| 
வீறு வீறு ஆயும் உழவன் போல, | |
| 
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய | |
| 
5 | 
மூதிலாளருள்ளும், காதலின் | 
| 
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை, | |
| 
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே; | |
| 
கேட்டியோ வாழி பாண! பாசறை, | |
| 
'பூக் கோள் இன்று' என்று அறையும் | |
| 
10 | 
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே? | 
| 
திணை ...............; துறை ................முல்லை.
 | |
| 
கழாத்தலையார் பாடியது.
 | 
| 
 368 | 
| 
களிறு முகந்து பெயர்குவம் எனினே, | |
| 
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல, | |
| 
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன; | |
| 
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே; | |
| 
5 | 
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி, | 
| 
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே; | |
| 
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே, | |
| 
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி, | |
| 
வளி வழக்கு அறுத்த வங்கம் போல, | |
| 
10 | 
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க | 
| 
முகவை இன்மையின் உகவை இன்றி, | |
| 
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து, | |
| 
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ! | |
| 
கடாஅ யானைக் கால்வழி அன்ன என் | |
| 
15 | 
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி, | 
| 
பாடி வந்தது எல்லாம், கோடியர் | |
| 
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் | |
| 
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே. | |
| 
திணை வாகை; துறை மறக்களவழி.
 | |
| 
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.
 |