| முகப்பு | தொடக்கம் | 
| 
கழைதின் யானையார் | 
| 
 204 | 
| 
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர், | |
| 
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று; | |
| 
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர், | |
| 
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று; | |
| 
5 | 
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல் | 
| 
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே; | |
| 
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி, | |
| 
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும், | |
| 
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்; | |
| 
10 | 
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, | 
| 
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால் | |
| 
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில் | |
| 
கருவி வானம் போல | |
| 
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.
 |