| முகப்பு | தொடக்கம் | 
| 
கள்ளில் ஆத்திரையனார் | 
| 
 175 | 
| 
எந்தை! வாழி; ஆதனுங்க! என் | |
| 
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே; | |
| 
நின் யான் மறப்பின், மறக்கும் காலை, | |
| 
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும், | |
| 
5 | 
என்னியான் மறப்பின், மறக்குவென் வென் வேல் | 
| 
விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர் | |
| 
திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த | |
| 
உலக இடைகழி அறை வாய் நிலைஇய | |
| 
மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும் | |
| 
10 | 
பலர் புரவு எதிர்ந்த அறத் துறை நின்னே. | 
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
 | 
| 
 389 | 
| 
'நீர் நுங்கின் கண் வலிப்ப, | |
| 
கான வேம்பின் காய் திரங்க, | |
| 
கயம் களியும் கோடை ஆயினும், | |
| 
ஏலா வெண்பொன் போருறு காலை, | |
| 
5 | 
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!' | 
| 
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை; | |
| 
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்; | |
| 
செலினே, காணா வழியனும் அல்லன்; | |
| 
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து, | |
| 
10 | 
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும் | 
| 
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன், | |
| 
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்! | |
| 
ஆதனுங்கன் போல, நீயும் | |
| 
பசித்த ஒக்கல் பழங்கண் வீட, | |
| 
15 | 
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும! | 
| 
ஐது அகல் அல்குல் மகளிர் | |
| 
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.
 |