| முகப்பு | தொடக்கம் | 
| 
காரிகிழார் | 
| 
 6 | 
| 
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும், | |
| 
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும், | |
| 
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும், | |
| 
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும், | |
| 
5 | 
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் | 
| 
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது | |
| 
ஆனிலை உலகத்தானும், ஆனாது, | |
| 
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த் | |
| 
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம் | |
| 
10 | 
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க! | 
| 
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து, | |
| 
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச் | |
| 
சிறு கண் யானை செவ்விதின் ஏவி, | |
| 
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து, | |
| 
15 | 
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம் | 
| 
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி, | |
| 
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர் | |
| 
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே! | |
| 
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த | |
| 
20 | 
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே! | 
| 
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார் | |
| 
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே! | |
| 
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை | |
| 
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே! | |
| 
25 | 
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய | 
| 
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி! | |
| 
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர் | |
| 
ஒண் கதிர் ஞாயிறு போலவும், | |
| 
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே! | |
| 
திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
 | |
| 
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.
 |