| முகப்பு | தொடக்கம் | 
| 
காவட்டனார் | 
| 
 359 | 
| 
பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின், | |
| 
வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு, | |
| 
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல, | |
| 
பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி, | |
| 
5 | 
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர், | 
| 
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி, | |
| 
ஈம விளக்கின் வெருவரப் பேரும் | |
| 
காடு முன்னினரே, நாடு கொண்டோரும்; | |
| 
நினக்கும் வருதல் வைகல் அற்றே; | |
| 
10 | 
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்; | 
| 
அதனால், வசை நீக்கி இசை வேண்டியும், | |
| 
நசை வேண்டாது நன்று மொழிந்தும், | |
| 
நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு, | |
| 
பொலம் படைய மா மயங்கிட, | |
| 
15 | 
இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது, | 
| 
'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென, | |
| 
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும், | |
| 
ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே. | |
| 
திணை அது; துறை பெருங்காஞ்சி.
 | |
| 
அந்துவன் கீரனைக் காவட்டனார் பாடியது.
 |