| முகப்பு | தொடக்கம் | 
| 
காவற் பெண்டு | 
| 
 86 | 
| 
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன் | |
| 
யாண்டு உளனோ?' என வினவுதி; என் மகன் | |
| 
யாண்டு உளன்ஆயினும் அறியேன்; ஓரும் | |
| 
புலி சேர்ந்து போகிய கல் அளை போல, | |
| 
5 | 
ஈன்ற வயிறோ இதுவே; | 
| 
தோன்றுவன் மாதோ, போர்க்களத்தானே! | |
| 
திணை வாகை; துறை ஏறாண் முல்லை.
 | |
| 
காவற்பெண்டின் பாட்டு.
 |