| முகப்பு | தொடக்கம் | 
| 
காவிரிப் பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் | 
| 
 57 | 
| 
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும், | |
| 
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன, | |
| 
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற! | |
| 
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின், | |
| 
5 | 
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு | 
| 
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க; | |
| 
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க; | |
| 
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் | |
| 
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம் | |
| 
10 | 
கடிமரம் தடிதல் ஓம்பு நின் | 
| 
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே. | |
| 
திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
 | |
| 
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
 | 
| 
 58 | 
| 
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே, | |
| 
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக் | |
| 
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு, | |
| 
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது, | |
| 
5 | 
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ, | 
| 
இளையது ஆயினும் கிளை அரா எறியும் | |
| 
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச் | |
| 
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே, | |
| 
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே, | |
| 
10 | 
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என, | 
| 
வரைய சாந்தமும், திரைய முத்தமும், | |
| 
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் | |
| 
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே; | |
| 
பால் நிற உருவின் பனைக் கொடியோனும், | |
| 
15 | 
நீல் நிற உருவின் நேமியோனும், என்று | 
| 
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு, | |
| 
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி, | |
| 
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ? | |
| 
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே; | |
| 
20 | 
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும் | 
| 
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப் | |
| 
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம் | |
| 
கையகப்படுவது பொய் ஆகாதே; | |
| 
அதனால், நல்ல போலவும், நயவ போலவும், | |
| 
25 | 
தொல்லோர் சென்ற நெறிய போலவும், | 
| 
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் | |
| 
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது, | |
| 
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று | |
| 
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக் | |
| 
30 | 
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி | 
| 
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த | |
| 
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே. | |
| 
திணை பாடாண் திணை; துறை உடனிலை.
 | |
| 
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
 | 
| 
 169 | 
| 
நும் படை செல்லும்காலை, அவர் படை | |
| 
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ, | |
| 
அவர் படை வரூஉம்காலை, நும் படைக் | |
| 
கூழை தாங்கிய, அகல் யாற்றுக் | |
| 
5 | 
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ, | 
| 
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்; | |
| 
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை; | |
| 
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல் | |
| 
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார், | |
| 
10 | 
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் | 
| 
பெரு மரக் கம்பம் போல, | |
| 
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே! | |
| 
திணை அது; துறை பரிசில் கடா நிலை.
 | |
| 
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
 | 
| 
 171 | 
| 
இன்று செலினும் தருமே; சிறு வரை | |
| 
நின்று செலினும் தருமே; பின்னும், | |
| 
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி | |
| 
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி, | |
| 
5 | 
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்; | 
| 
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப | |
| 
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்; | |
| 
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும், | |
| 
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும், | |
| 
10 | 
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை | 
| 
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே. | |
| 
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி | |
| 
முள்ளும் நோவ உறாற்கதில்ல! | |
| 
ஈவோர் அரிய இவ் உலகத்து, | |
| 
15 | 
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே! | 
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.
 | 
| 
 353 | 
| 
ஆசு இல் கம்மியன் மாசு அறப் புனைந்த | |
| 
பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல், | |
| 
ஈகைக் கண்ணி இலங்கத் தைஇ, | |
| 
தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கி, | |
| 
5 | 
தவிர்த்த தேரை, விளர்த்த கண்ணை, | 
| 
வினவல் ஆனா வெல் போர் அண்ணல்! | |
| 
'யார் மகள்?' என்போய்; கூறக் கேள், இனி: | |
| 
குன்று கண்டன்ன நிலைப் பல் போர்பு | |
| 
நாள் கடா அழித்த நனந் தலைக் குப்பை | |
| 
10 | 
வல் வில் இளையர்க்கு அல்கு பதம் மாற்றாத் | 
| 
தொல் குடி மன்னன் மகளே; முன்நாள் | |
| 
கூறி வந்த மா முது வேந்தர்க்கு | |
| 
............................................. | |
| 
............................................. உழக்கிக் குருதி ஓட்டி, | |
| 
15 | 
கதுவாய் போகிய துதி வாய் எஃகமொடு, | 
| 
பஞ்சியும் களையாப் புண்ணர், | |
| 
அஞ்சுதகவு உடையர், இவள் தன்னைமாரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
 |