| முகப்பு | தொடக்கம் | 
| 
குட புலவியனார் | 
| 
 18 | 
| 
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் | |
| 
பரந்துபட்ட வியல் ஞாலம் | |
| 
தாளின் தந்து, தம் புகழ் நிறீஇ, | |
| 
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல்! | |
| 
5 | 
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய | 
| 
பெருமைத்தாக, நின் ஆயுள்தானே! | |
| 
நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் | |
| 
பூக் கதூஉம் இன வாளை, | |
| 
நுண் ஆரல், பரு வரால், | |
| 
10 | 
குரூஉக் கெடிற்ற, குண்டு அகழி; | 
| 
வான் உட்கும் வடி நீள் மதில்; | |
| 
மல்லல் மூதூர் வய வேந்தே! | |
| 
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும், | |
| 
ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி, | |
| 
15 | 
ஒரு நீ ஆகல் வேண்டினும், சிறந்த | 
| 
நல் இசை நிறுத்தல் வேண்டினும், மற்று அதன் | |
| 
தகுதி கேள், இனி, மிகுதியாள! | |
| 
நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் | |
| 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே; | |
| 
20 | 
உண்டி முதற்றே உணவின் பிண்டம்; | 
| 
உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே; | |
| 
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு | |
| 
உடம்பும் உயிரும் படைத்திசினோரே; | |
| 
வித்தி வான் நோக்கும் புன் புலம் கண் அகன் | |
| 
25 | 
வைப்பிற்று ஆயினும், நண்ணி ஆளும் | 
| 
இறைவன் தாட்கு உதவாதே; அதனால், | |
| 
அடு போர்ச் செழிய! இகழாது வல்லே | |
| 
நிலன் நெளி மருங்கில் நீர் நிலை பெருகத் | |
| 
தட்டோர் அம்ம, இவண் தட்டோரே; | |
| 
30 | 
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே. | 
| 
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.
 | |
| 
பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.
 | 
| 
 19 | 
| 
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை, | |
| 
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து, | |
| 
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும், | |
| 
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய! | |
| 
5 | 
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய | 
| 
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி, | |
| 
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக் | |
| 
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல, | |
| 
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத் | |
| 
10 | 
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து, | 
| 
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள, | |
| 
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் | |
| 
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்; | |
| 
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என, | |
| 
15 | 
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி, | 
| 
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை, | |
| 
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின் | |
| 
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே? | |
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 |