| முகப்பு | தொடக்கம் | 
| 
குறமகன் இளவெயினி | 
| 
 157 | 
| 
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும், | |
| 
பிறர் கையறவு தான் நாணுதலும், | |
| 
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும், | |
| 
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும், | |
| 
5 | 
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன், | 
| 
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல், | |
| 
கோடல் கண்ணி, குறவர் பெருமகன் | |
| 
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை, | |
| 
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி, | |
| 
10 | 
கட்சி காணாக் கடமான் நல் ஏறு | 
| 
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை | |
| 
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் | |
| 
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.
 |