| முகப்பு | தொடக்கம் | 
| 
குறுங் கோழியூர் கிழார் | 
| 
 17 | 
| 
தென் குமரி, வட பெருங்கல், | |
| 
குண குட கடலா எல்லை, | |
| 
குன்று, மலை, காடு, நாடு, | |
| 
ஒன்று பட்டு வழிமொழிய, | |
| 
5 | 
கொடிது கடிந்து, கோல் திருத்தி, | 
| 
படுவது உண்டு, பகல் ஆற்றி, | |
| 
இனிது உருண்ட சுடர் நேமி | |
| 
முழுது ஆண்டோர் வழி காவல! | |
| 
குலை இறைஞ்சிய கோள் தாழை | |
| 
10 | 
அகல் வயல், மலை வேலி, | 
| 
நிலவு மணல் வியன் கானல், | |
| 
தெண் கழிமிசைத் தீப் பூவின், | |
| 
தண் தொண்டியோர் அடு பொருந! | |
| 
மாப் பயம்பின் பொறை போற்றாது, | |
| 
15 | 
நீடு குழி அகப்பட்ட | 
| 
பீடு உடைய எறுழ் முன்பின், | |
| 
கோடு முற்றிய கொல் களிறு | |
| 
நிலை கலங்கக் குழி கொன்று, | |
| 
கிளை புகலத் தலைக்கூடியாங்கு | |
| 
20 | 
நீ பட்ட அரு முன்பின் | 
| 
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப, | |
| 
பிறிது சென்று, மலர் தாயத்துப் | |
| 
பலர் நாப்பண் மீக்கூறலின், | |
| 
'உண்டாகிய உயர் மண்ணும், | |
| 
25 | 
சென்று பட்ட விழுக் கலனும், | 
| 
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும், | |
| 
'ஏந்து கொடி இறைப்புரிசை, | |
| 
வீங்கு சிறை, வியல்அருப்பம், | |
| 
இழந்து வைகுதும், இனி நாம் இவன் | |
| 
30 | 
உடன்று நோக்கினன், பெரிது' எனவும், | 
| 
வேற்று அரசு பணி தொடங்கு நின் | |
| 
ஆற்றலொடு புகழ் ஏத்தி, | |
| 
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய | |
| 
மழை என மருளும் பல் தோல், மலை எனத் | |
| 
35 | 
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை, | 
| 
உடலுநர் உட்க வீங்கி, கடல் என | |
| 
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது | |
| 
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப, | |
| 
இடி என முழங்கும் முரசின், | |
| 
40 | 
வரையா ஈகைக் குடவர் கோவே! | 
| 
திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
 | |
| 
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
 | 
| 
 20 | 
| 
இரு முந்நீர்க் குட்டமும், | |
| 
வியல் ஞாலத்து அகலமும், | |
| 
வளி வழங்கு திசையும், | |
| 
வறிது நிலைஇய காயமும், என்றாங்கு | |
| 
5 | 
அவை அளந்து அறியினும், அளத்தற்கு அரியை, | 
| 
அறிவும், ஈரமும், பெருங் கண்ணோட்டமும்: | |
| 
சோறு படுக்கும் தீயோடு | |
| 
செஞ் ஞாயிற்றுத் தெறல் அல்லது | |
| 
பிறிது தெறல் அறியார், நின் நிழல் வாழ்வோரே; | |
| 
10 | 
திருவில் அல்லது கொலை வில் அறியார்; | 
| 
நாஞ்சில் அல்லது படையும் அறியார்; | |
| 
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய, அப் | |
| 
பிறர் மண் உண்ணும் செம்மல்! நின் நாட்டு | |
| 
வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது, | |
| 
15 | 
பகைவர் உண்ணா அரு மண்ணினையே; | 
| 
அம்பு துஞ்சும் கடி அரணால், | |
| 
அறம் துஞ்சும் செங்கோலையே; | |
| 
புதுப் புள் வரினும், பழம் புள் போகினும், | |
| 
விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை; | |
| 
20 | 
அனையை ஆகல்மாறே, | 
| 
மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
 | 
| 
 22 | 
| 
தூங்கு கையான் ஓங்கு நடைய, | |
| 
உறழ் மணியான் உயர் மருப்பின, | |
| 
பிறை நுதலான் செறல் நோக்கின, | |
| 
பா அடியான் பணை எருத்தின, | |
| 
5 | 
தேன் சிதைந்த வரை போல, | 
| 
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து, | |
| 
அயறு சோரும் இருஞ் சென்னிய, | |
| 
மைந்து மலிந்த மழ களிறு | |
| 
கந்து சேர்பு நிலைஇ வழங்க; | |
| 
10 | 
பாஅல் நின்று கதிர் சோரும் | 
| 
வான் உறையும் மதி போலும் | |
| 
மாலை வெண் குடை நீழலான், | |
| 
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க; | |
| 
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த | |
| 
15 | 
ஆய் கரும்பின் கொடிக் கூரை, | 
| 
சாறு கொண்ட களம் போல, | |
| 
வேறு வேறு பொலிவு தோன்ற; | |
| 
குற்று ஆனா உலக்கையான் | |
| 
கலிச் சும்மை வியல் ஆங்கண், | |
| 
20 | 
பொலந் தோட்டுப் பைந் தும்பை | 
| 
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ, | |
| 
சின மாந்தர் வெறிக் குரவை | |
| 
ஓத நீரின் பெயர்பு பொங்க; | |
| 
வாய் காவாது பரந்து பட்ட | |
| 
25 | 
வியன் பாசறைக் காப்பாள! | 
| 
வேந்து தந்த பணி திறையான் | |
| 
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும், | |
| 
ஓங்கு கொல்லியோர், அடு பொருந! | |
| 
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்! | |
| 
30 | 
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே, | 
| 
நிற் பாடிய வயங்கு செந் நாப் | |
| 
பின் பிறர் இசை நுவலாமை, | |
| 
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ! | |
| 
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே | |
| 
35 | 
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து, | 
| 
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை, | |
| 
வேறு புலத்து இறுக்கும் தானையொடு, | |
| 
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே! | |
| 
திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
 | |
| 
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.
 |