| முகப்பு | தொடக்கம் | 
| 
குன்றூர் கிழார் மகனார் | 
| 
 338 | 
| 
ஏர் பரந்த வயல், நீர் பரந்த செறுவின், | |
| 
நெல் மலிந்த மனை, பொன் மலிந்த மறுகின், | |
| 
படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின், | |
| 
நெடு வேள் ஆதன் போந்தை அன்ன, | |
| 
5 | 
பெருஞ் சீர் அருங் கொண்டியளே; கருஞ் சினை | 
| 
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் | |
| 
மலைந்த சென்னியர், அணிந்த வில்லர், | |
| 
கொற்ற வேந்தர் வரினும், தன் தக | |
| 
வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப் | |
| 
10 | 
பிணங்கு கதிர்க் கழனி நாப்பண், ஏமுற்று | 
| 
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் | |
| 
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
குன்றூர் கிழார் மகனார் பாடியது.
 |