| முகப்பு | தொடக்கம் | 
| 
கோப்பெரும் சோழன் | 
| 
 214 | 
| 
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே | |
| 
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி | |
| 
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே; | |
| 
யானை வேட்டுவன் யானையும் பெறுமே; | |
| 
5 | 
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே: | 
| 
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு, | |
| 
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின், | |
| 
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்; | |
| 
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின், | |
| 
10 | 
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்; | 
| 
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக் | |
| 
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு, | |
| 
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே. | |
| 
திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
 | |
| 
அவன் வடக்கிருந்தான் சொற்றது.
 | 
| 
 215 | 
| 
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் | |
| 
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய | |
| 
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ, | |
| 
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை | |
| 
5 | 
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் | 
| 
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் | |
| 
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே; | |
| 
செல்வக் காலை நிற்பினும், | |
| 
அல்லற் காலை நில்லலன்மன்னே. | |
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.
 | 
| 
 216 | 
| 
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும் | |
| 
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய, | |
| 
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும், | |
| 
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று, | |
| 
5 | 
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்! | 
| 
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்; | |
| 
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே; | |
| 
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர் | |
| 
பேதைச் சோழன்' என்னும், சிறந்த | |
| 
10 | 
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை, | 
| 
இன்னது ஓர் காலை நில்லலன்; | |
| 
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.
 |